Wednesday, 3 June 2015

வீர பராக்கிரமம் பொருந்திய சோழர் காலத்து வன்னியர் விற்படை (The Bowmen Regiment of the Chola Army)




அரியலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள மாற வர்மன் பராக்கிரம பாண்டியனின் (கி.பி.1338) கல்வெட்டில் வன்னியர்களின் விற்படை நிகழ்த்திய வீரச் செயலைப் பற்றிக் குறிப்பிடுகிறது.


விக்கிரம சோழனின் நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி.1122) கர்நாடகத்தில் போசல (ஹொய்சால) நாட்டை ஆண்டு வந்த முதலாம் விஷ்ணு வர்த்தனன் என்ற அரசன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். இதனைப் பராக்கிரமப் பாண்டியனின் கல்வெட்டு "பெரியவடுகன் கலகம்" என்று குறிப்பிடுகிறது. சோழநாட்டின் மீது படையெடுத்த போசள மன்னன் ஆடுதுறை பகுதியிலும் தாக்குதல் நடத்தி ஆடுதுறை சிவன் கோயிலில் இருந்த தெய்வத் திருமேனிகளையும் நாயன்மார் மூவர் பிரதிமங்களையும் கவர்ந்து சென்று போசளர் தலைநகரமாகிய துவாரசமுத்திரத்தில் வைத்திருந்தனர்.


பின்னர் இதனை அறிந்த ஆடுதுறை பகுதியை சேர்ந்த பள்ளிகள் (வன்னியர்கள்) அங்கிருந்து துவாரசமுத்திரம் சென்று போசளர்களுடன் சண்டையிட்டு, அவர்களால் கவரப்பெற்ற ஆடுதுறை கோயிலுக்குரிய தெய்வத் திருமேனிகளையும், நாயன்மார் மூவர் பிரதிமங்களையும் மீட்டு வந்து அத்திருவுருவங்களை மீண்டும் ஆடுதுறை சிவன் கோயிலிலேயே வைத்து நாள் வழிபாடுகள் செய்வதற்கு ஆண்டொன்றுக்கு 100 கலம் அரிசியும், 5000 காசும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அத்திருமேனிகளை வழிபாட்டில் வைத்தனர். அதற்காக அவர்கள் குடி ஒன்றுக்கு ஒருகுறுணி அரிசியும், 50 காசும், அமுதுபடி மற்றும் சாத்துபடிக்கு வில்லுக்கு ஒரு பணமாக வசூல் செய்வது என்று முடிவுசெய்தனர்.


சிலைகளை மீட்ட பள்ளிகளைக் கௌரவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு பட்டுப்பரிவட்ட மரியாதை கொடுத்து, இறைவன் திருமுன் நின்று வழிபாடு செய்யும் உரிமையும் அளித்து, "வந்தான் தேவர்கள் தேவன்" மற்றும் "பன்னாட்டார் தம்பிரான்" என்ற திருசின்னமும் (Royal Insignia) அளித்து வன்னியர்களின் வீரத்தை பெருமை படுத்தினர் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் (பெருமாள் குலோத்துங்கச் சோழ தேவர் திருவாய் மலர்ந்தருளின படி). இதற்கான ஆணையை அவர் பிறப்பித்தார்கள் என்று கல்வெட்டு கூறுகின்றது.


கி.பி.1122 இல் விக்கிரம சோழன் காலத்தில் நடந்த ஒரு அருஞ் செயலுக்காக 216 ஆண்டுகள் கழித்து சோழர் ஆட்சிக்குப் பிறகு மாற வர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் அதே பள்ளி இன மக்களுக்கு மரியாதை மற்றும் சலுகைகள் வழங்கியமை தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.


இந்த விற்படை குழுக்களில் பெயர்கள் (Bowmen Regiment) :-


"ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னநான முடிகொண்ட சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"


"ஓலைப்பாடியில் காணி உடைய பள்ளிகளில் காரி கிரிச்சன் விக்கிரம சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"


"தொங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகந் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"


"மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகத சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"


(Ref : ஆவணம், இதழ்-18, பக்கம் 84-86), (A.R.E. No.35 of 1913).


----- xx ----- xx ----- xx -----


கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள எல்லை : "வீரநாராயணன் பேரேரிக்கு மேற்க்கு பச்சை மலைக்கு கிழக்கு காவேரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணை ஆற்றுக்குத் உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தொறும்"

The area of their habitation defined in this inscription covers a hilly and dry area extending roughly a hundred kilometers from north to south and eighty kilometers from east to west in Tiruchirapalli and South Arcot Districts (180 Sq/Kms).



கல்வெட்டின் இறுதியில் : "பல மண்டலங்களில் பள்ளி நாட்டவரோம்", "பள்ளி நாட்டவர் வம்சம் விளங்க" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


----- xx ----- xx ----- xx -----