Sunday, 14 June 2015

ராஜஸ்தான் அபு மலையில் செய்வித்த யாகத்தீயில் இருந்து தோன்றிய அரசர்கள்



ராஜஸ்தான் அபு மலையில் செய்வித்த யாகத்தீயில் இருந்து தோன்றிய அக்னி குல அரசர்களை பற்றி சொல்கிறது கிழ் காணும் கல்வெட்டு.  சங்க தமிழ் இலக்கியமான புறநானூறு (பாடல் 201 & 202), வேள்வியில் தோன்றிய அரசனான "இருங்கோவேளைப்" பற்றி குறிப்பிடுகிறது.  சங்கத் தமிழ் புலவரான கபிலர் அவர்கள், வேளிர் குல மன்னனான இருங்கோவேளைப் பார்த்து, நீயோ வடபால் முனிவன் ஓமகுண்டத்தில் தோன்றியாவன்.  உன்னுடைய முன்னோர்கள் துவாரகையை (சிந்து சமவெளி) ஆண்டவர்கள் என்று  குறிப்பிடுகிறார்கள்.  புலவர் கபிலர் அவர்கள் குறிப்பிடும் "வடபால் முனிவன்" என்பவர் "சம்பு மாமுனிவன்" என்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் தமிழ் இலக்கியங்களை கொண்டு உறுதி செய்துள்ளார்கள். 


வடபால் முனிவன் (சம்பு மாமுனிவன்) வடபகுதியை சார்ந்தவர் என்பது அவர் பெயரில் இருந்தே தெரியவருகிறது.  குறிப்பாக க்ஷத்ரியர்கள் "அபு மலையில்" செய்வித்த யாகத்தீயில் இருந்து தோன்றியவர்கள் என்பது வரலாறாகும்.


மனிதர்கள் எப்படி அக்னியில் இருந்து தோன்றமுடியும் என்று சிலர் வினா தொடுக்கிறார்கள்.  இவைகளை நமது பண்டைய மரபு என்று கருத்தில் கொள்ளவேண்டும். பண்டைய காலத்தில் அரசர்கள் "அக்னியில் தோன்றிய"  கருத்து என்பது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகில் பல பகுதிகளில் இருந்து வந்தது.  மகாபாரதம் திரௌபதியும், த்ருஷ்டதுய்மனும் "அக்னியில் தோன்றியவர்கள்" என்று சொல்கிறது.  நமது தமிழ் கடவுளான "முருகனும்" சிவபெருமானது நெற்றிக் கனல் நெருப்பில் இருந்து தோன்றியவரே.  அக்னி குண்டத்தில் தோன்றிய யது குல  "சாளுக்கியர்கள்",  தங்களது குல கடவுளாக "முருகனையே" வழிப்பட்டார்கள் என்பது வரலாறாகும். 


அரசர்களுடைய தோற்றத்தை "கடவுளுக்கு" நிகராக அக் காலகட்டத்தில் கருதப்பட்டது.  அரசர்களின் ஆதி தோற்றத்தை விட அவர்களின் வம்சத்தினர் கடந்த காலத்தில் செய்த சாதனைகள், புகழ்  மற்றும் அவர்கள் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்கள் இன்று நம்மை வியப்பூட்டுகின்றன.  இந்த பெருமைக்கெல்லாம் உரிமையானவர்கள் யார் என்பதே வரலாற்றில் முக்கியத்துவமான ஒன்றாகும்.  அதை விடுத்து அரசர்களின் தோற்றத்தின் கதைகளை கிண்டல் செய்வது என்பது அவர்கள் நமக்கு விட்டுசென்ற அனைத்தையும் கிண்டல் செய்வதற்கு சமமாகும்.  மேலும் இக் கருத்துக்களை சொன்ன தமிழ் புலவர் பெருமக்களான, "கபிலர்", "கம்பர்", "இரட்டைப் புலவர்", தமிழ் தாத்தா உ.வே.சா, போன்றோரை அவமதிக்கும் செயலாகும்.

    
----- xx ----- xx ----- xx -----
  

"Mount Abu Vimala Temple Inscription of 1378 A.D", which says, the "Kings" generated from the "Fire-Pit"  :-


"The first part begins with the well-known story how on the mountain Arbuda there sprang from the fire-pit (anala-kunda, agni-kunda) of the sage vasishtha the hero Paramara.  In his lineage appeared the hero Kanhada Deva ; and in his family there was a chief named Dhandhu (Dhandhu Raja), who was Lord of the town of Chandravati and who, averse from rendering homage to the Chaulukya King Bhima Deva"  


(Epigraphia Indica, Vol-IX, No.18, page-151).



----- xx ----- xx ----- xx -----


சோழர்களும் சம்புவராயர்களும் க்ஷத்ரியர்கள்



சோழ மன்னர்கள் தங்களை "க்ஷத்ரியர்கள்" என்று கல்வெட்டுக்களிலும் செப்புபட்டையங்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.  சோழர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்த வன்னியர் சமூகத்தை சேர்ந்த "சம்புவராய அரசர்கள்" தங்களை  "சகல புவன சக்கரவர்த்திகள்" என்று பல கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள்.  இது அவர்களை "க்ஷத்ரியர்கள்" என்று நிறுவுகிறது.  இதைப் போன்ற புகழ் மிகும் கீர்த்திகளை "க்ஷத்ரிய அரசர்கள்" மட்டுமே அக் காலத்தில் பயன்படுத்தமுடியும்.


மேலும் சம்புவராய அரசர்கள் சோழ அரசர்களைப்  பற்றி குறிப்பிடும்பொழுது, "எங்களது வம்சத்தவர்கள்" என்று நேரிடையாக  தெரிவிக்கிறார்கள்.  இச் செய்தியானது காஞ்சிபுரம் திருவாலீஸ்வரர் கோயிலில் உள்ள கி.பி.1171 ஆம் ஆண்டை சார்ந்த இரண்டாம் ராஜாதிராஜ சோழனின் கல்வெட்டின் மூலம் உறுதிச் செய்யப்படுகிறது.


அக்னியில் தோன்றிய சந்திர வம்சத்து (யது குலம்) க்ஷத்ரிய மன்னனான குலசேகர பாண்டியனுக்கும், இலங்கை படைக்கும் போர் நடைபெற்றது.  இப் போருக்கு சோழர்கள் பாண்டியர்களுக்கு படை உதவி செய்தார்கள். எதிரிலிச் சோழ சம்புவராயன் தலைமையிலான  சோழர் படைகள் பாண்டியர்களுக்கு உதவியது. இப் போருக்கு தலைமை வகித்த வன்னிய அரசனான "எதிரிலிச் சோழ சம்புவராயன்", இலங்கை படைகளை தோற்கடித்து அப் போரில் வென்றார்கள்.  இதைப்  பற்றி குறிப்பிடும் கல்வெட்டு தான் காஞ்சிபுரத்தில் உள்ள திருவாலீஸ்வரர் கோயிலில் உள்ளது (கி.பி.1171).  அதில் சம்புவராய அரசர் கிழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-


"சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது எங்கள் வம்சத்து தர்ம்மம் பரிபாலிப்பது"


இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் செய்தி என்னவென்றால், "சோழ ராஜா அவர்கள் ஆட்சிசெய்யும் தர்மமானது எங்கள் க்ஷத்ரிய வம்சத்து தர்மமாகும்" என்று வன்னிய அரசனான எதிரிலிச் சோழ சம்புவராயர்  அவர்கள் குறிப்பிடுகிறார்கள். "எங்கள் வம்சத்து தர்மம்" என்பது "எங்கள் க்ஷத்ரிய வம்சத்து தர்மம்" என்பதாகும்.  


இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டின் மூலம் தெரியவரும் செய்தி என்னவென்றால், சோழர்களும் மற்றும் சம்புவராயர்களும் ஒரே வம்சத்தவர்கள் ஆவார்கள்.  அதாவது "க்ஷத்ரிய வம்சத்தவர்கள்".


வன்னிய அரசர்களான "காடவராயர்கள்" (பல்லவர்கள்) சோழர்களிடம் மிக நெருங்கிய திருமண உறவு கொண்டவர்கள் ஆவார்கள். அதைப்போலவே காடவராயர்களும், சம்புவராயர்களும் மிக நெருங்கிய உறவினர்கள் என்பதை மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஆறகளூர் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. அக் கல்வெட்டில் எதிரிலிச் சோழ சம்புவராயர்,  காடவராய அரசரை "மைச்சுனனார்" (மச்சான், Brother-in-law) என்று குறிப்பிடுகிறார்கள்.  மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகளை, காடவன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் திருமணம் செய்துள்ளான்.  க்ஷத்ரியனான சோழன், தன் மகளை ஒரு க்ஷத்ரியனுக்கு தான் திருமணம் செய்து தருவான் என்பது இயல்பானதே ஆகும்.  


எனவே சோழர்கள், காடவராயர்கள் மற்றும் சம்புவராயர்கள் அனைவரும் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தை சேர்ந்த மன்னர்கள் என்பது வரலாற்றில் உறுதிச் செய்யப்படுகிறது.  சோழர்களின் குல தெய்வமான தில்லை நடராஜர் கோயிலில் உள்ள புனிதப் படியான பஞ்சாக்ஷரப்படியில் "திருஅபிசேகம்" செய்து ராஜ சபையான ஆயிரங்கால் மண்டபத்தில்  "திருமுடிசூடுபவர்கள்"  சோழ வேந்தர்கள் மட்டுமே என்பது வரலாறு ஆகும்.  அத்தகையவர்கள் "பிச்சாவரம் சோழ வேந்தர்கள்"  ஆவார்கள். அவர்கள் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" ஆவார்கள்.


----- xx ----- xx ----- xx -----        






           

Saturday, 6 June 2015

பிச்சாவரம் சோழர்களின் கல்வெட்டு


கல்வெட்டு வாசகம் :-


"னார் செய்த
நெறியுடை
ச் சோழகோ
ன் திருத்தோ
ப்பு"


இந்த கல்வெட்டு பிச்சாவரம் சோழர்களின் தலைநகரான "தேவிக்கோட்டையில்" (தீவுக்கோட்டை) கிடைத்தது.  கல்வெட்டின் காலம் கி.பி.16 ஆம் நூற்றாண்டாகும்.


இக் கல்வெட்டில் இடம்பெற்றிருக்கும் "சோழகோன்" என்பவரைத்தான் தஞ்சையை ஆண்ட "ரகுநாத நாயக்கர்" அவர்கள் போரில் தோற்கடித்தார்கள்.  ரகுநாத நாயக்கர்  "தீவுக்கோட்டை சோழகனை" தோற்கடிக்கவே "கர்நாடக பேரரசால்" தமிழகத்திற்கு அனுப்பப்பட்டவர். 


அத்தகைய வலிமை வாய்ந்த "மாவீரனாக தீவுக்கோட்டை சோழகன்" இருந்திருக்கிறார்.  சோழ பேரரசு கி.பி.1279 இல் விழ்ச்சியுற்றபொழுது,  சோழ வேந்தர்களின் சந்ததியர்கள் பாதுகாப்புக்கருதி கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து தங்களின் "தேவிக்கோட்டைக்கு" இடம் பெயர்த்திருக்கிறார்கள். 


கி.பி.14 ஆம் நூற்றாண்டில் "வீர வர்ம சோழன்" என்னும் சோழ மன்னர் "பிச்சாவரத்தில்" இருந்து அட்சிபுரிந்ததாக தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரான "கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார்" அவர்கள் தான் இயற்றிய சமஸ்கிரத நூலான "பார்த்தவன மகாத்மியம்" மற்றும் "ராஜேந்திரபுர மகாத்மியத்திலும்" மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். 


இந்த கல்வெட்டு புகைப்படத்தை எங்களுக்கு கொடுத்துதவிய கும்பகோணம் திரு. ஜெயபாலன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.


இப்படிக்கு :  திரு. அண்ணல் கண்டர்  &  நா. முரளி நாயக்கர்.


----- xx ----- xx ----- xx -----






பிரம்ம குல க்ஷத்திரியன் அனந்தபத்மநாபன்









நாகர்கோயில் திருவிதாங்கோடு செப்பேடு, சேர மன்னன் "ஸ்ரீ வீர இரவி பால மார்த்தாண்ட வர்மா" அவர்களால் கி.பி. 1748 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.  அவர் "பிரம்ம குல க்ஷத்திரியரான அனந்தபத்மநாபனுக்கு" நிலத்தை தானமாக கொடுத்துள்ளார்கள்.  சேர அரசர் அவர்களின் மிக நெருங்கிய உறவினராகவும் (நம்முடைய உற்ற பெந்துவும்) வலதுகரமாகவும்  "தளபதி அனந்தபத்மநாபன்" அவர்கள் விளங்கியுள்ளார்கள்.  சமஸ்கிருதத்தில் "பெந்து" (பந்து சனம்) என்றால் உறவினர் என்பதாகும். 


சேர அரசர்கள் (கேரள வர்மா அரசர்கள்) "வன்னிய குல க்ஷத்திரியர்கள்" என்பதால் தான் அவர்களுடைய உற்ற உறவினரான  தளபதி அனந்தபத்மநாபன் அவர்களையும் திருவிதாங்கோடு செப்பேடு "பிரம்ம குல க்ஷத்திரியன்" என்று கூறுகிறது. 


இதைப் பற்றி மிகத் தெளிவாக அறியாத சிலர் "தளபதி அனந்தபத்மநாபன்" அவர்களை "நாடார்" (சாணார்) சமூதாயத்தை சேர்ந்தவர் என்று தவறாக பொருள் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருவிதாங்கோடு செப்புப்பட்டயத்தில் வரும்  "பிரம்ம க்ஷத்திரியர்" என்பதையும்  "உற்ற பந்துவையும்"  நாடார் இனத்துடன் பொருத்தி பார்க்காமல் விட்டுவிட்டனர்.  நாடார் இன மக்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதே அடிப்படைச் சான்றுகள் கூறும் உண்மையாகும்.  


இக் கருத்துக்கு துணைச் சான்றாக அமைவது அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளந்தை கல்வெட்டாகும்.  இக் கல்வெட்டு உடையார்பாளையம் அரசர்களை "கச்சி பிரம்ம வன்னியர்" என்று குறிப்பிடுகிறது. உடையார்பாளையம் அரசர்கள் தங்களை ஆவணங்களில் "கச்சி பிரம்ம வன்னிய குல க்ஷத்திரியர்" என்றே குறிப்பிடுகிறார்கள்.  மேலும் அக் கல்வெட்டு உடையார்பாளையம் அரசர்களின் உறவினர்களான (பந்து சனம்) "விளந்தை வாண்டையார்களைப்" பற்றிக் குறிப்பிடுகிறது.


எனவே  சேர மன்னன் "ஸ்ரீ வீர இரவி பால மார்த்தாண்ட வர்மா" அவர்களும், அவர்களின் உற்ற உறவினரான  "தளபதி அனந்தபத்மநாபன்" அவர்களும்   "பிரம்ம வன்னிய குல க்ஷத்திரியர்கள்" ஆவார்கள்.  வன்னியர்களான பல்லவ அரசர்களும் தங்களை  "பிரம்ம க்ஷத்திரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.


----- xx ----- xx ----- xx -----

Friday, 5 June 2015

அரசர்களின் பள்ளிப்பீடமும் பள்ளிக்கட்டிலும்


The term "Palli" (பள்ளி) refers to "King".  Moreover, the "Palli Pedam" (பள்ளிப்பீடம்),"Palli Kattil" (பள்ளிக் கட்டிலில்) refers to "King's Throne".


"மதுரைக் கொயிற்ப் பள்ளியறைக் கூடத்துப்
பள்ளிப்பிடம் மழவராயனில் எழுந்தருளி
இருந்து மழவராயா" (S.I.I. Vol-V, No.301)


"திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 40-வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்துக் கோயிலுள்ளால் ஜயங்கொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து ராஜாதிராஜன் மண்டபத்து பள்ளிக் கட்டிலில் எழுந்தருளியிருக்க". (A.R.E No.45 of 1921), (Kanchipuram District Inscriptions, Tamil Nadu Archaeological Department, Page-134, No.40/2005), (Kulottunga Chola-I, 1110 A.D).


"கோச்சடையன் பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள்
குலைசேகர தேவற்கு யாண்டு ஆறாவது நாட்டாற்றுப்
போக்கு திருக்குறுங்குடி திருப்பாற்கடல் அழ்வார்க்கு
மாடக்குளக்கிழ் மதுரை உள்ளாலை அழகிய பாண்டியன்
கூடத்து பள்ளிக் கட்டில் பாண்டிய ராசனில் எழுந்தருயிருந்து"
(ஆவணம்-24, 2013, Page-181), (Thiruparkadal, Nambi Koil Inscription, Mara Varman Kulasekara Pandiyan, 1285 A.D).


"கவிநாட்டுப் பெரு நற்கிள்ளி
சோழப் பெரும் பள்ளி யாந
அரசகண்டராமப் பெரு பள்ளி
இத்தன்மம்"  (ஆவணம் இதழ்-15, ஜூலை-2004, பக்கம்-86).
(புதுகோட்டை வட்டம், கவிநாட்டுக் கண்மாயின் கிழக்குக் கலிங்கின் சுவரில் வடிக்கப்பெற்றுள்ள கி.பி. 13-ஆம் நூற்றண்டு கல்வெட்டு).


பெருநற்கிள்ளி சோழப் பெரும் பள்ளி (என்ற) அரசகண்ட ராமப் பெரும் பள்ளி என்றவன் ஒரு கண்மாயை அமைத்து தந்ததை இக் கல்வெட்டு குறிப்பிடிகிறது. "பெரும்பள்ளி" என்ற சொல் இறந்தவர்களுடைய சமாதியை (அரசர்களுடையது) குறிப்பிடும் சொல்லாக கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் மேலே குறிப்பிட்ட கல்வெட்டில் அது அந்த பொருளில் அமையாது. மாறாக ஒருவனுடைய பெயராகும். அவன் "வன்னியன்" (சோழன்).


"ஸ்வஸ்திஸ்ரீ கொனெரின் மெகொண்டான்
தென் கவி னாட்டாற்க்கு தங்கள் நாட்டுக்
கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிளிச் சொழப்
பெரும்பள்ளி யாழ்வாற்க்கு திருப்படி மாற்றுள்ளிட்டு
வேண்டும் நிமன்தங்களுக்கு இவ்வூர்ப் பள்ளி உடையர்கள்
காணியான"
(I.P.S. No.530), (புதுக்கோட்டை, ஆலங்குடி வட்டம், திருக்கோகர்ணத்தில், கி.பி. 13-ஆம் நூற்றண்டு, பாண்டியர் காலம்).


பள்ளி பெருநற்கிள்ளி சோழனுக்கு பள்ளி உடையர்கள் நிமந்தங்கள் அளித்ததை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு குறிப்பிடுகிறது.


"ஓதுக்கின்றினி மண புதுப் பூம் பள்ளி
வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே"
(புறம் 33 : 20 - 22).


நலங்கிள்ளி என்னும் சோழ மன்னன் ஒவ்வொறு பள்ளி மாடத்திற்கும் சென்று வழிபாடு செய்தான் என்று மேற்குறிப்பிட்ட புறநானுறு பாடல் கூறுகிறது. "பள்ளி மாடம்" என்பது "அரசருடைய சமாதியை" குறிப்பிடுவதாகும்.  எனவே பள்ளி என்பது அரசரைக் குறிப்பிடும் சொல்லாகும்.


இது பற்றி குண்ணம் முனுசுவாமிப் பிள்ளை அவர்கள், 1872-ஆம் ஆண்டு எழுதியுள்ள "ஜாதி சங்கிரஹ சாரம்" என்னும் நூலில் 165-வது பக்கத்தில் குறித்திருப்பது, சேரர் பள்ளி இனத்தை அதாவது வன்னிய இனத்தை சார்ந்தவர் என்பதை நியாயப்படுத்துவதாகக் காணப்படுகிறது.


இப்போது மகுட வர்த்தனாயிருக்கப்பட்டவரசனும் "பள்ளி" யென்கிற பேரை வகித்திருக்கின்றார்.  அதெப்படி யென்றால் அரசன் கையாளப்பட்ட சர்வமும், அரசன் போக்கு வரத்தையுங் குறித்து அவரூழியக்காரர்களும் மற்றவர்களும் அரசனுடைய பட்டத்துக் குதிரையைப் "பள்ளியினுடைய குதிரை" யென்றும், அரசனேறும் பல்லக்கைப் "பள்ளியினுடைய பல்லக்கு" யென்றும் அரசன் கையாளப்பட்ட பெட்டியைப் "பள்ளியினுடைய பெட்டி" யென்றும், அரசன் படுக்கும் வீட்டைப் "பள்ளியினுடைய அறை" யென்றும், அரசன் வருவதைக் குறித்துப் "பள்ளி வருகிறாரென்றும்", அரசன் போவதைக் குறித்துப் "பள்ளி போகிறாரென்றும்" நாளது வரையில் பேசி வருகின்றனர் என்று எழுதியிருக்கிறார்.  சேர அரசரையும் அவர் பயன்படுத்தும் பொருட்களையும் வன்னியரின் மற்றொரு பெயரான "பள்ளி" என்ற முன்னொட்டோடு அழைப்பதால், சேரர் "வன்னியர்" என்பது முடிபாகும்.  


----- xx ----- xx ----- xx -----

இலக்கியங்களில் வன்னியர்கள்

The Sangam  Literature, "Pathitru Pathu" (பதிற்றுப் பத்து) refers about "Vanniya Mandram" (Kings Burial Place).  During cholas time, the "Kings Burial Place" has been referred as "Palli Padai Koil" :-


"மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விழங்கிய காடே" 


திரிகடுகம், நல்லாதனார், பாடல்-46  says the following :-


"கால் தூய்மை இல்லாக் கலிமாவும் காழ்கடிந்து
மேல் தூய்மை இல்லாத வெங்களிறும் சீறிக்
கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி இம் மூன்றும்
குறுகார் அறிவுடையார்"
    

The Sangam Age Literature "Thirikadugam" refers about "Palli".   The poet compares the Vanniyas "Valours/Powers" at par with "Horses" and "Elephants", which were used in the battle fields.   The poet further says about "Warriors Attitude".  Such "Attitude" (Kshatriyas Attitude) was mandatory in those days to conquer many victories.  During imperial cholas time, we have the names such as "Vettung Kai Azhagiya Kachiyarayar" (வெட்டுங்கை அழகிய கச்சியராயர்),  "Atkolli Kadavarayar" (ஆட்கொல்லி காடவராயர்), "Val Valla Peruman" (வாள் வல்ல பெருமான்) etc.  


மன்னர்கள் தமது முன்னோர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் எழுப்பினர்.  இவற்றில் வழிபாடுகளை கூட அவர்கள் நடத்தினர்.  இத்தகைய நினைவுச் சின்னங்களுக்கு "கோட்டம்" எனவும் "பள்ளி வாயில்" எனவும் பெயர் வழங்கப்பெற்றது :-


"இந்த ஈமப்புறங்காட்டு அரசர்க்கமைந்த ஆயிரம் கோட்டம்"   (மணிமேகலை, வரிகள் - 165 & 166).


"ஓதுக்கின்றிணி புதுப் பூம்பள்ளி
வாயின் மாடந்தொறு மைவிடை விழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே"     (புறம் 33 : 20 -22)


விளக்கம் :  ஒவ்வொரு பள்ளி மாடத்துக்கும் சென்று சோழ மன்னன் நலங்கிள்ளி வழிபாடு செய்தான் என்று புறநானூறு கூறுகிறது.   "பள்ளி மாடம்" என்பது அரச குலத்தோரின் சமாதி.  "பள்ளி" என்ற சொல் அரச குலத்தில் வழங்கப்பட்டு வந்ததை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.    



"வன்னி" எனில் "மன்னன்" :-


கல்லாடனார் என்ற பழம்பெரும் தமிழ்ப் புலவர் "கல்லாடம்" என்ற அற்புதமான இலக்கியத்தைப் படைத்து  இருக்கிறார்.  திருவள்ளுவரின் காலத்து இலக்கியமாக "கல்லாடம்" கருதப்படுகிறது.  இதில் "அரசன்" என்று குறிப்பிட "வன்னி" என்ற சொல்லையே கல்லாடனார் பயன்படுத்தி இருக்கிறார்.  


"கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றரிதரு குட்டியாய பன்னிரண்டினைச்
செங்கோல் முளையிட் டருணீர் தேக்கிக்
கொலைகள வென்றும் படர்களைக் கட்டுத்
திக்கு படரானை வேலி கோலித்
தருமப் பெரும்பயி ருலகுபெற விளக்கும்
நாற்படை வன்னியராக்கிய பெருமான்" 


விளக்கம் :  பன்னிரண்டு பன்றிக் குட்டிகளை நாற்படை வன்னியராகச் சிவபெருமான் படைத்தார் என்கின்றது கல்லாடம்.  இவ்வுலகில் தருமம் என்னும் பயிர் தழைத்து ஓங்கும் வகையில் நால்வகை சேனைகளுடன் வன்னியர்களை உண்டாக்கிய கடவுள். பன்னிரண்டு பன்றிக் குட்டிகள் என்பது வேளிர்களை குறிப்பதாகும்.


மகாபாரதம், ஆதிபருவம், 169-வது ஸ்லோகத்தில், "யாகசேனர் இயற்றிய வேள்வித்தீயினின்றும் 'திருஷ்டத்யும்மனும்', 'திரௌபதியும்' தோன்றினர்" என்று கூறப்பட்டுள்ளது.    வில்லிபுத்தூரார் மகாபாரதமும், எங்கள் குல திரௌபதியை "வன்னியில் பிறந்த மாமயிலும்" என்று குறிப்பிடுகிறது.       


மகாபாரதம், ஆதிபருவம், காண்டவதகன சர்க்கம் 231-வது அத்தியாயத்தில், மண்டபால மகரிஷி என்பவர் அக்கினியைப் பற்றி கிழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார் :-


"ஓ அக்கினியே  !  நீதான் இரண்டு
அஸ்வினிகளாகவும் இருக்கிறாய் !
நீயே சூரியன்  !  நீயே சந்திரன்  !
நீயே வாயு  ! "


மகாபாரதம், ஆரண்ய பருவம், 220-வது அத்தியாயம், மார்க்கண்டேய சருக்கம், 5-வது ஸ்லோகம் :-


"அக்நிச்சாபி மநுர்நாம ப்ரஜா பத்யமகாரயத்
சம்புமக்நி  மதப் ராஹீ : பிராம்மணா வேதபாரகா : "           


விளக்கம் :  வேதத்தில் மிகவல்ல  பிராமணர்கள் சம்பு என்ற அக்னி புத்திரனுடைய பிரதாபங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.  


தமிழ் பாகவதம் 8-வது காண்டத்தில் கூறப்பட்டுள்ள செய்தி :-


"இயம்பு இரண்டாம் சீர் மனுவினை உரைக்கின்
இலங்கும் அக்கினி முனம் ஈன்ற
நயம் தரு சுவாரோசி நவன் உலகம்
நவை அறக் காக்கும் நாள்"


விளக்கம் :  அக்கினியின் மகனான ஸ்வரோசி எனப்படும் இரண்டாம் மனு அரசுரிமை பெற்று அரசாட்சி செய்தான்.  இதே விபரம் பாகவதம் (சமஸ்கிருதம்) 8-வது காண்டம், முதல் அத்தியாயம், 20-வது ஸ்லோகத்திலும் கூறப்பட்டுள்ளது. 


"மச்சபுராணத்திலே, 195-வது  அத்தியாயத்திலே, அங்கிரஸுவின் கோத்திரத்திலுதித்த அரசர்களின் சந்ததிகளைக் கூறுமிடத்து அக்கினி என்னும் அரசனைக் கூறி, அதன்பின்னர் பாண்டு என்னும் அரசனையுங் கூறி,  அதன்பின்னர் பாண்டு என்னும் அரசனையுங் கூறப்பட்டிருக்கின்றது. இப்பாண்டுவின் வம்சத்தவரே பாண்டியர் என்பதற்கு வடமொழி இலக்கணஞ் செய்த பாணினி முனிவரும் "பாண்டிய" வென்னும் மொழிக்குக் காரணத்துடன் பகுப்பிலக்கணம் சொல்லி பாண்டியர் பாண்டுவின் வம்சத்தில் வந்தவரென்று கூறியிருக்கின்றனர்.    (Rev. William Tailor, Pandiya History, Second volume).     


----- xx ----- xx ----- xx -----

திருவக்கரை மழவராயர்கள்

 

மழவர்கள் என்பவர்கள் "சிலை வீரர்கள்" (வில் வீரர்கள்) என்று நச்சினார்கினியர் அவர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். இன்றைய "அரியலூர், பெரம்பலூர்" மாவட்டங்கள் சங்ககாலத்தில் "மழ நாடென்றே" வழங்கப்பெற்றது.  "மழவர் பெருமகன் அதியமான்" நாடான  தகடுரும் (தருமபுரி), "மழவர் பெருமகன் வல்வில் ஓரியின்" நாடான கொல்லிமலையும் "மழவர் நாடென்று" சங்க காலத்தில் வழங்கப்பெற்றது.  மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில்  "மழவர் குடியும்" ஒன்றாகும். அத்தகைய குடியோர் "வன்னியர்கள்" ஆவார்கள். இவ் மழவர் குடியில் வந்தவளே சோழர்களின் ராஜமாதாவாக விளங்கிய  "செம்பியன் மாதேவி"  ஆவாள்.   பிற்காலச் சோழர்கள் காலத்தில் "வன்னியர்கள்" மழநாட்டின் "வில் வீரர்களாக" சோழர் படையில் பணியாற்றியிருக்கிறார்கள்.  அவர்கள் "பள்ளிகள்" என்ற பெயராலும் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள். 


அரியலூர் மாவட்டம், திட்டக்குடி கல்வெட்டு மழவர்களுடைய  (வன்னியர்)  எல்லைகளை எடுத்துச் சொல்கிறது. "வீரநாராயணன் பேரேரிக்கு மேற்க்கு பச்சை மலைக்கு கிழக்கு காவேரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணை ஆற்றுக்கு தெற்க்கு உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தொரும் குடிக்கு ஐம்பது காசும் அரிசி குறுணியுமாக"  (Line 9 & 10 of the Tittakudi Inscription, Mara Varman Parakkrama Pandiyan , 1338 A.D).


"இன்னாயநாற்க்கு அமுதுபடி சாத்துபடிக்கு உடலாக நாலாவது முதல் வில்லுக்குகொரு பணமாக"  (Line 14 of the Tittakudi Inscription).  "இப்படி சம்மதித்து சன்டிராதித்தவரையுஞ் செல்ல கல்வெட்டிக் குடுத்தோம் பல மண்டலங்களில் பள்ளி நாட்டவரோம்"  (Line 16 of the Tittakudi Inscription).         மேற்குறிப்பிட்ட கி.பி. 14-ஆம் நூற்றாண்டின்  கல்வெட்டில் இருந்து மழ நாட்டின் எல்லைகள் (180 Kms approximate) தெரியவருகிறது.  அம் மழநாட்டின் எல்லைகளுள் "திருவக்கரையும்" ஒன்றாகும். 


வன்னிய அரசர்களான அரியலூர் மழவராயர்களைப் போல திருவக்கரையிலும் வன்னிய சமூகத்து "மழவராய அரசர்கள்"   கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்கள் :-


திருவக்கரை உடைய நயினார் ஸ்ரீ பண்டாரத்தாரும்  (1515 A.D)

எங்குமாய் நின்றார் மழவராயர்   (1526 A.D)

திருத்தாண்டவமுடைய மழவராயர் (1531 A. D)

நயினார் வசவப்ப மழவராயர்  (17th century A.D)

திருவக்கரை சிதம்பர மழவராயர் (17th century A.D)

திருவக்கரை வல்லவ நாட்டு மழவராய பண்டாரத்தார்
(வன்னியர் வில்லியனூர் செப்பேடு, கி.பி.1641).   


இது வன்னியர்களுக்கு ஒரு புதிய அரசமரபினர்களைப் பற்றிய செய்தியாகும்.  திருவக்கரை மழவராயர்கள் பற்றிய விரிவான கட்டுரை மிக விரைவில் வெளிவரும் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


----- x ----- x ----- x -----

பட்டினத்தார் குறிப்பிடும் கடல்சூழ்ந்த பல நாட்டை ஆண்ட வன்னியர்கள்




பட்டினத்தார் என்று அழைக்கபெரும் "பட்டினத்தடிகள்" அருளிச் செய்த ஞானம் 45-வது கவி :-


"வேண்டுந்திரவியமும் மேலுயர்ந்த பள்ளியெல்லாம்
ஆண்ட திரைநாடும் அம்பலமும் - மாண்டுபெருங்
காடுரந்தாரேமனமே கண்டாயோ மாயனயன்
தேடரிய ஈசன் செயல்" என்னும் கவியில் பட்டினத்தடிகள்


"மேலுயர்ந்த பள்ளியெல்லாம் ஆண்ட திரைநாடும்" என்பதால் "பள்ளிகள்" (வன்னியர்கள்) பல நாட்டை ஆண்ட அரசர்கள் எனவும் அவர்கள் அரசாட்சி செய்தது கடலால் சூழப்பட்ட நாடுகள் எனவும் தெரியவருகிறது.


பல நாட்டை ஆண்ட அரசர்கள் என்பதால் தான் வன்னியர்களை சோழர்கள் காலத்தில் "பன்னாட்டவர்கள்" என்று கல்வெட்டிலும் இலக்கியத்திலும் குறிப்பிடப்பட்டனர்.


பட்டினத்தடிகள் "திரைநாடு" என்று சொல்வது "பல்லவர்கள் ஆண்ட நாடுகளை" குறிப்பதாகும். பல்லவர் கோன் கழற்சிங்க நாயனார் அவர்களை, சுந்தரர் தனது திருத்தொண்டர் தொகையில் கிழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-


"கடல்சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற் சிங்கன் அடியார்க்கு அடியேன்"


பல்லவ குல பரிஜாதமான காடவர் கோன் கோப்பெருஞ்சிங்கன், ஆமூர் கல்வெட்டில் "திரையன் மோகனன் ஆளப்பிறந்தானான திருநீற்று தொண்டைமான்" என்று குறிப்பிடப்படுகிறான். பல்லவர் கோன் கோப்பெருஞ்சிங்கன் "திரையன்" என்று அழைக்கப்பெற்றான். அவன் தனது முன்னோனான "காடவர் கோன் கழற்சிங்கனைப்" போன்று சோழர்கள் காலத்தில் "கடல்சூழ்ந்த திரை நாடுகளை" ஆண்டிருக்கலாம் அல்லது அவனுடைய குல முன்னோரின் பெயரினை பயன்படுத்தியிருக்கலாம்.


எனவே பட்டினத்தடிகள் தமது கவியில் சொன்ன "உயர்குலத்து பள்ளி எல்லாம் ஆண்ட திரை நாடுகள்" என்பது சான்றுகள் மூலம் முற்றிலும் உண்மையாகிறது. பட்டினத்தார் வாக்கின் மூலமாக "வன்னியர்கள் பல நாட்டை ஆண்ட பரம்பரை" என்பது வரலாற்றில் உறுதிப்படுத்தப்படுகிறது.


----- xx ----- xx ----- xx -----


குறிப்பு : "காடவர் கோன் கழற்சிங்க நாயனார்" திருவுருவமும் (இத் திருவுருவம் சோழர்கள் காலத்து தராசுரம் கோயிலில் இருக்கிறது) மற்றும் "காடவர் கோன் கோப்பெருஞ்சிங்கன்" திருவுருவமும் (இத் திருவுருவம் சோழர்கள் காலத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கிறது) இக் கட்டுரையுடன் புகைப்படங்களாக கொடுக்கப்படுகிறது.






Wednesday, 3 June 2015

"கொங்கரையர்" பட்டம் கொண்ட வன்னியர்கள்




தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள  "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு தொடர் எண் : 01/1999, கிழ் கண்ட பெயரை குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு ஆகும் :-


"கொங்கரையர் கள்ளப் பெருமானார் தேவியார் கொங்கச்சியார்"


"கள்ள" என்ற முன்னொட்டு கல்வெட்டில் இருக்கின்ற காரணத்தினால், இப் பெயரை சில கள்ளர் சமூகத்தவர்கள்  தங்களது வம்சத்தவர்களாக தெரிவிக்கிறார்கள்.


ஆனால் இது முற்றிலும் தவறானதாகும் என்பதை கிழ் காணும் அதே  "காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்" என்ற நூலில் உள்ள கல்வெட்டு (தொடர் எண் : 05/2004) ஒன்று நமக்கு தெளிவாக தெரிவிக்கிறது. இக் கல்வெட்டின் காலம் கி.பி.1194 ஆகும் (மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம்) ;-


"கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன் சிவக்கொழுந்துக் கண்ணப்பன்"    


இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பது மிகத் தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது.  மேலும் "கொங்கரையர்" என்பது அவர்களது "பட்டப் பெயர்" ஆகும்.


எனவே கி.பி. 8-9 ஆம் நுற்றாண்டுகளில் குறிப்பிடப்படும் "கொங்கரையர் கள்ளப் பெருமானார்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்தவர் என்பதை கி.பி.1194 ஆம் ஆண்டு சோழர்கள் காலத்து கல்வெட்டில் குறிப்பிடப்படும் "கலிக்கம்பசேரி பள்ளி கொங்கரையன்" என்பவரின் "கொங்கரையர்" பட்டப் பெயர் மூலம் தெரியவருகிறது.  "கள்ளப் பெருமானார்" என்பது பெயராகும்.  அது "கிருஷ்ண பகவானைக்" குறிப்பிடும் பெயராகும்.


புதுக்கோட்டை மாவட்ட சோழர் கால கல்வெட்டு ஒன்று "கள்ள கண்ணன்" (I.P.S. No.142) என்று தெரிவிக்கிறது.  இது ஒருவருடைய பெயராகும் என்பது மிக மிக தெளிவாகும்.  அதாவது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயராகும்.

தொல்லியல் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் என்ற நூலை எழுதிய அறிஞர் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் "தெற்கில் பிரமன் பூசித்த வெள்ளைக்கம்பரும் வடக்கில் திருமால் வழிபட்ட கள்ளக்கம்பரும் அருள் பாலிக்கின்றன" (பக்கம்-251) என்று குறிப்பிடுகிறார்கள்.  காஞ்சிபுரம் மாவட்டம் காயர் கிராமத்தில் "ஸ்ரீ கள்ளிச்சி அம்மன்" ஆலயமும் இருக்கிறது.   


கங்கர்களின் கிளைமரபினர்களான பங்கள நாட்டு கங்கரைய மன்னர் ஒருவர் தன்னை "அழிவின் கள்ளரசியார்" என்று கல்வெட்டில் குறித்துள்ளார் :-


"பங்களநாடுடையார் மஹாதெவர் மகன் அழிவின் கள்ளரசியாராகிய பிருதிகங்க அரையர்"  (A.R.E.No.139 of 1928).   


முதுகுடி வேளிர்களான கங்கர்கள்  அக்னியில் தோன்றிய க்ஷத்ரிய மரபினர்கள் ஆவர்.  இவர்கள் தங்களை "வன்னிய மாதேவன்" என்றும் "அத்தி மல்லன்" என்றும் "பிரம்ம க்ஷத்ரியன்" என்றும் கல்வெட்டில் குறிப்பிட்டனர்.


கங்கர்களின் கிளைமரபினர்களான நீலகங்கர்கள் தங்களை "பள்ளி" என்றும் "வன்னிய நாயன்" என்றும் "வன்னிய சாமந்தன்" என்றும்  "சம்பு குலத்தவன்" என்றும் குறித்தனர்.  நீலகங்கர்களின் பண்ணையான மணிமங்கலத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று "கங்க ராஜா மண்டபம்" என்று குறிப்பிடுகிறது.  நீலகங்கர்கள் தங்களை "சோழ கங்க தேவன்" என்றும் "வாணன்" என்றும் "நீலகங்க வாணன்" என்றும் "பஞ்சநதி வாணன்" என்றும் "மலையரையன்" என்றும் குறிப்பிட்டனர்.   


மேலும் இவர்கள் தங்களை "நீலகங்கன் அச்சல வீமன் அரசர் தலைவன்" என்றும் குறிப்பிட்டனர்.  அதாவது "அரசர்களுக்கு தலைவனான நீலகங்கன் அச்சல குலமான மலையமான் குலத்திற்கு பீமன் போன்றவன்" என்று முதலாம் குலோத்துங்கச் சோழனின் ராணிப்பேட்டை திருவல்லம்  கல்வெட்டில் குறிப்பிட்டனர்.  இதே கல்வெட்டில் நீலகங்கர் மகளும், முதலாம் குலோத்துங்கச் சோழ தேவரின் (ராஜபுத்திர சாளுக்கிய மரபினர்) மருமகளுமான "வில்லவன் மாதேவியார்" அவர்களும் குறிப்பிடப்படுகிறார்கள்.


----- xx ----- xx ----- xx -----


By : N. Murali Naicker

















சம்புவராய அரசர்களை "வன்னியர்கள்" என்று குறிப்பிடும் கங்காதேவியின் "மதுராவிஜயம்"




தமிழ் நாட்டில் சில சூத்திர சமூகத்தை சேர்ந்த அறிவாளிகள்    "வன்னியர்களுக்கு",  வன்னியர் என்ற பெயரே கிடையாது என்றும்  "பள்ளிகள்" என்ற பெயரில் மட்டுமே அழைக்கப்பெற்றனர் என்றும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.  மேலும் அவர்கள், "வன்னியர்" என்ற பெயரில் பல சமூகத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் போலி வரலாறு எழுதி தங்களுக்கு தானே மகிழ்கிறார்கள்.
 

நாங்கள் பல முறை அவர்களுக்கு சோழர்கள் காலத்து கல்வெட்டு விளக்கம் கொடுத்தப்பிறகும் அவர்கள் தொடர்ந்து "வன்னியர்" என்ற பெயருக்கு உரிமை கொண்டாடிவருகிறார்கள்.  சிறிதும் வெட்கம் இல்லாமல் உரிய சான்றுகள் (சோழர் காலச் சான்றுகள்) கொடுக்காமல் இழிவானச் செயலில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.  


அத்தகையோருக்கு சம்மட்டியடி கொடுப்பது போல கிடைக்கப்பெற்றது தான்  கங்காதேவியின் "மதுராவிஜயம்" என்ற 14 ஆம் நூற்றாண்டின் வடமொழி நூலாகும்.


வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி தன் கணவன் தென்னாட்டு திக் விஜயத்தில் (போரில்) வெற்றியடைந்ததைப் போற்றும் வகையில் "மதுரா விஜயம்" என்ற வடமொழி காவியத்தை எழுதினார்கள்.


மதுரா விஜயத்தில் மூன்றாம் காண்டத்தில் உள்ள 42-ஆம் ஸ்லோகம் சம்புவராயர்களை "வன்னியர்கள்" என்று குறிப்பிடுகிறது.  அது :-


"அதன்பிறகு குறுநில மன்னர்களான வன்னியர்களை உம்முடைய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டுவந்தால் துலுக்கர்களின் ஆட்சியை அகற்றிவிடலாம்"   என்று சொல்கிறது.


மேற்சொன்ன சான்று என்பது நாங்கள் சொல்லவில்லை, வீர கம்பண்ண உடையாரின் மனைவி கங்காதேவி சொன்ன சான்றாகும்.  கங்கதேவியே எங்களை "வன்னியர்கள்" என்று சொன்னப்பிறகு மற்றவர்கள் அப்படி இல்லை என்று சொல்வதற்கு என்ன சான்று இருக்கிறது.


சம்புவராயர், காடவராயர், மலையமான் உள்ளிட்ட பல மன்னர்கள் சோழர் காலத்தில் தங்களை "பள்ளி" என்றும் "வன்னியர்" என்றும் "சம்பு குலத்தவர்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள்.  இதையெல்லாம் உணராத சில சூத்திர சமூகத்தவர்கள் தங்களையும் "வன்னியர்கள்" என்று அற்பத்தனமாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.


அத்தகையோருக்கு எங்களது அழ்ந்த அனுதாபங்கள். 





----- xx ----- xx ----- xx -----



சோழர்கள் காலத்தில் திருத்துறைப்பூண்டியில் வாழ்ந்த வன்னியர்களை, "வன்னியர்கள்" என்று சொல்லும் கல்வெட்டு




"கேரளகுலாசனி சருப்பேதி மங்கலத்து வன்னியரில் சோழயவரையன் அகம்படியார்க் காவல்கூலிக்கு இட்ட நிலமாயவொனை"  (Line  8  to  11).

(திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள், தொடர் எண் : 205/1976, காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு).


கேரளகுலாசனி (கேரள குலத்திற்கு சனியன் போன்றவன்) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்த "வன்னியர் சமூகத்தை சேர்ந்த சோழஅரையன்" என்பவர் அகம்படியார்களுக்கு காவல்கூலிக்கு கொடுத்த நிலம் பற்றிய ஆணை"


இக் கல்வெட்டில் இடம்பெறும் "வன்னியர் சமூகத்தை சேர்ந்த சோழஅரையன்" என்பவர் பிராமணர்கள் வாழும் சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்திருக்கிறார். அவர் அகம்படியார்களுக்கு காவல்கூலிக்கு கொடுத்த நிலம் தவிர சில நிலங்களை இறைவனுக்கு கொடையாக கொடுத்திருக்கிறார்.


----- xx ----- xx ----- xx ----- 


அறந்தாங்கி தொண்டைமான்களும் மற்றும் புதுக்கோட்டை தொண்டைமான்களும்




இந்திர குலத்தை சார்ந்த "புதுக்கோட்டை தொண்டைமான்கள்" கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். புதுக்கோட்டை தொண்டைமான்கள், சூரியனார் கோயில் ஆதினப் பட்டையத்தில் தங்களை "இந்திர குல வங்கிஷன்" (இந்திர குல வம்சத்தவர்) என்று குறிப்பிடுகிறார்கள்.


சூரிய குலத்தை சார்ந்த "அறந்தாங்கி தொண்டைமான்கள்" வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.  அறந்தாங்கி தொண்டைமான்கள் "அழுஞ்சியேந்தல் செப்பேடு" மற்றும் "கிழ்ப்பாப்பனூர்ச் செப்பேட்டில்" தங்களை "சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்" என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் அவர்கள் "ஏனாதிச் செப்பேட்டில்" தங்களை "சூரிய வங்கிச திலகன்"  என்று குறிப்பிடுகிறார்கள்.


அறந்தாங்கி தொண்டைமான்கள் "பிறாந்தனில் ஏந்தல்கள் குறிச்சிகள் செப்பேட்டில்" தங்களை "முகிலின் கிழ்திரியும் இள வன்னிய மகா கண்டன்" என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது "மேகத்தில் திரியும் இளம் சூரியனை போன்ற மகா கண்டன்" என்பதாகும்.  எனவே "இள வன்னிய" என்பது "இளம் சூரியன்" என்று பொருள்படும்.  அறந்தாங்கி தொண்டைமான்கள் "வன்னியராகிய சூரிய குலத்தவர்கள்" ஆவார்கள்.


இதைப்போலவே  புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டிலும் தங்களை பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.  அதில் "முகிலின் கிழ்திரியும்" என்ற பகுதி சிதைந்து காணப்படுகிறது. ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் மற்றும் மணியம்பலம்  கல்வெட்டுகளில், அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களை "இள வன்னியர் மீசுர கண்டன்" என்று குறிப்பிடுகிறார்கள் (I.P.S. No.738 & 845). இக் கல்வெட்டுகளின் மூலம் இவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தவர்கள் என்று அறியமுடிகிறது.      


அறந்தாங்கி தொண்டைமான்களின் முன்னோர் என்று அவர்களால் குறிக்கப்பெற்ற தொண்டைமான் இளந்திரையான் நாககன்னிகைபால் பிறந்த சோழன் மகன் என்ற காரணத்தால் தங்களைச் சோழர் குலமாகவே குறிப்பிட்டுக்கொண்டனர். அவர்கள் மெய்க்கீர்த்தியில் அதைக் குறிக்கும் பல தொடர்கள் உள்ளன. அவை :-


"சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்"

"நலம்பெறு சோழ ராசாவின் மரபினன்"

"புலிக்கொடி மேருவில் பொறித்தருள் புகழோன்"

"புறாவினுக்காகத் துலைபுகு பிரபலன்"

"கிடாரத்து அரசன் தெய்விதம் அளித்தோன்"

"கலிங்கம் திறக்கொண்டு பரணி புனைந்தோன்"

"கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்"

"ஓட்டக் கூத்தன் உயர்தமிழ் புனைந்தோன்"


இத் தொடர்கள் சோழர் குல தொடர்பை குறிப்பிடுவதாகும்.  இவற்றில் சோழர்களின் சூரிய குலம், இமயத்தில் சோழர்கள் பொறித்த புலிக்கொடி, புறாவுக்காக தன் சதையை கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி, கிடாரத்தை வென்ற முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம்   குலோத்துங்கச் சோழன் மற்றும் கருணாகர தொண்டைமான் பற்றிய கலிங்கத்துப்பரணி, வன்னியர்களின் புகழினைப் பற்றி சிலைஎழுபது கவி பாடிய கவிச்சக்ரவர்த்தி கம்பருக்கு கருணாகர தொண்டைமான்  செம்பொன் பரிசளித்தது, ஓட்டக்கூத்தர் சோழர்கள் பற்றி பாடிய மூவருலா போன்றவைகள் குறிப்பிடப்படுகின்றன.      


பல்லவர்களான அறந்தாங்கி தொண்டைமான்கள், தங்களை "பண்ணைவயல் செப்பேட்டில்" கிழ் கண்ட வாசகங்களில் குறித்துள்ளனர் :-


"பாலாறு உடைய பாக்கிய சம்பன்னன்" (சம்பு மன்னன்).

"மலை கலங்கினும் மனங்கலங் காதான்" (இவ் வாக்கியம் வன்னியர் பற்றியது, பல வன்னியர் செப்புபட்டயங்களில் இது வந்துள்ளது).

"கச்சியம் பதியான் கருணா கடாட்சன்" (காஞ்சிபுரத்தவன்).

"மல்லை மயிலை வண்டை நகராதிபன்" (மாமல்லபுரம், மயிலாப்பூர், வண்டலூர் நகரத்தின் அதிபன்).

"கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்" (கம்பர் எழுதிய, வன்னியர் புகழ்பாடும் "சிலை எழுபதிற்கு" செம்பொன் அளித்தவன்).

"நலம்பெறு சோழ ராசாவின் மரபினன்" (சோழரும், பல்லவரும் "க்ஷத்திரியர் என்பதாலும், இவர்களிடையே இருந்த மிக நெருங்கிய திருமணஉறவும் இதை உறுதிப்படுத்துகிறது).

"கலிங்கத் திறைகொண்டு பரணி புனைந்தோன்" (அறந்தாங்கி தொண்டைமான்களை, கலிங்கத்தை வென்று பரணி படைத்த "கருணாகர தொண்டைமான்" வம்சத்தவர்கள் என்று குறிப்பிடுகிறது).


எனவே மேற்சொன்ன காரணங்களால் "அறந்தாங்கி தொண்டைமான்கள்" பல்லவர்கள் என்பதும் அவர்கள் "வன்னிய குல க்ஷத்திரிய" சமூகத்தை சார்ந்த மரபினர்கள் என்பதும் பெறப்படுகிறது. சோழர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாகவும் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களாகவும் விளங்கிய "காடவர்கள்" (பல்லவர்கள்) வன்னியர் சமூகத்தவர்கள். இக் காரணமும் அறந்தாங்கி தொண்டைமான்களின் சமூக வரலாற்றுக்கு வலிமை சேர்கிறது.  


எனவே சோழர்களும், பல்லவர்களும் "வன்னிய குல க்ஷத்ரிய இனத்தை" சேர்ந்தவர்கள் என்பது வரலாற்றில் உறுதியாகிறது.


----- xx ----- xx ----- xx -----




சம்புவராயர்களது வீரப் புகழினை கூறும் மதுரா விஜயம்




மாபெரும் வீரம் பொருந்திய வன்னியர்களாகிய நாங்கள் மண்ணை காப்பதற்காக சில இடங்களில் போராடித் தோற்றோம் என்பது வரலாறு. தஞ்சையில் வாழ்ந்த கள்ளர்கள் எப்படி போராடாமல் "தஞ்சை நாயக்கர்களையும்", "தஞ்சை மராட்டியர்களையும்" உள்ளே விட்டார்கள் என்பது புரியவில்லை.  தஞ்சை ரகுநாத நாயக்கனை எங்களது "பிச்சாவரம் சோழ அரசர்" கடுமையாக எதிர்த்து போர் புரிந்தார்கள்.  தஞ்சை ரகுநாத நாயக்கர் "சோழகனை" போரில் வெற்றிக் கொள்ளவே கர்நாடகத்தில் இருந்து "தஞ்சைக்கு" வந்தான்.  எனவே "பிச்சாவரம் சோழகன்" தான் தஞ்சையை பாண்டியர்க்கு பிறகு ஆண்டான் என்பது எங்களது சோழ வீர வரலாறு.          


எங்களது சம்புவராயர்களது வீர வரலாற்றை பாருங்கள்.  அப்போது தான் தெரியும் நாங்கள் யார் என்று. தன் படைகள் எல்லாம் தோற்றுவிட்டது தாம் நிச்சயமாக இறக்கப்போகிறோம் என்று  தெரிந்தும்,  உயிர்பிழைக்க தப்பித்து வெளியே ஓடாமல்,  தனி ஒருவனாக மாபெரும் சேனையை எதிர்க்க எங்களது வீர வன்னிய குல க்ஷத்ரிய அரசனான சம்புவராயன் உருவிய வீர வாளுடன் அரண்மனையிலிருந்து வெளிவந்த காட்சியை, கி.பி.14 ஆம் நூற்றாண்டின் வடமொழி இலக்கியமான, கங்கா தேவியின் "மதுரா விஜயம்" மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.  அத்தகைய வீரச் செயல் தான் "க்ஷத்ரிய தர்மமாகும்".       


மதுரா விஜயம்,  நான்காம் காண்டம், சுலோகம்-77 :-

"புற்றிலிருந்து தன் நாக்குகளை நீட்டிக் கொண்டு சினத்தோடு வெளிவரும் நல்ல பாம்பைப் போன்று சம்புவராயன் உருவிய வாளுடன் அரண்மனையிலிருந்து வெளியே வந்தான்".


சுலோகம்-78  :-

"சேனைத்தலைவர்களும் மற்றும் வீரம்மிக்க படை வீரர்கள் ஒவ்வொருவரும் நான், நீ என்று போட்டி போட்டிக் கொண்டு சம்புவராயருடன் போர் செய்வதற்கு முன்வந்தபோதிலும் வீர கம்பண்ணர் சம்புவராயருடன் தானே போரிட விரும்புவதாகக் கூறி அவனை எதிர்கொள்ளப் புறப்பட்டார்".


சுலோகம்-79  :-

"வாள் வீசுவதால் வளைந்த மேனியோடும், குத்திட்டு நின்ற கண்களோடும் இருவரும் வீரப் போர் புரிந்தனர்".


சுலோகம்-80  :-

"இரு மாபெரும் வீரர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போரிடும் இந்தக் காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருந்த தெய்வங்கள், தமக்கு இமை கொட்டாத தன்மையை அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தனர்.


சுலோகம்-81  :-

"வீரகம்பண்ணர் தன் வாளைச் சுழற்றியபோது சம்புவராயர் கர்ப்பிணி ஒருத்தி அழகானதொரு கன்னிகைக்கு அமையப் போகும் கணவனாகிய சிசுவை ஈன்றெடுப்பவள் போல காணப்பட்டார்".  (சம்புவராயர் வீரகம்பண்ணரின் வாளால் மரணமெய்தி வீரசொர்க்கம் அடைந்து அங்கே தேவகன்னி ஒருத்திக்கு மணாளனாக ஆகும் தகுதியைப் பெறப் போகிறார் என்பதை இவ்வாறு கவி குறிப்பிடுகிறார்).


சுலோகம்-82 :-

"இந்திரனின் ஆளுகைக்குட்பட்ட வீரசொர்க் கத்திற்கு சம்புவராயரைத் தன் வாள் கொண்டு வீழ்த்தி வீரகம்பண்ணர் அனுப்பி வைத்தார்".   


இது தான் எங்களது  உண்மையான வீர வரலாறாகும்.


----- xx ----- xx ----- xx -----





தமிழ் நாட்டின் ராஜ குல வம்சத்தவர்கள்



தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு அரசால்பவர்கள் "வேந்தரும் வேளிரும்" ஆவர். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் இதை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன (பண்கெழு வேந்தரும் வேளிரும், இருபெரு வேந்தரொடு வேளிர்).  வேளிர் என்பவர்கள் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்த பண்டைய  மரபினர் ஆவர்.  வேளிர் என்பவர்கள்  "யாக குண்டத்தில்" தோன்றியவர்கள் அதாவது "அக்னியில்" உதித்தவர்களாவர்.    பண்டைய வேளிர் குல இருங்கோவேளும், சாளுக்கியரும், வேள் எனப்படும் வேள்வி செய்யும் யாக குண்டத்தில் தோன்றிய முனிவர் வழி வந்தவர்கள் ஆவர். துவாரகையில் இருந்து அரசர்களும் வேளிர்களும் தமிழகம் வந்ததாக நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரயுரையிலும் மற்றும் அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்கள். புறநானூறு பாடல்கள்  (201 & 202) நமக்கு இக் கருத்தை வலியுறுத்துகிறது.


பண்டைய அரசர்களான சேரர்கள்  "அக்னி குலத்தவர்"  என்று குறிப்பிடப்பட்டுள்ளனர் (செந்தழலோன் மரபாகி ஈரேழு உலகும் புகழ் சேரன்).  வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள் சேரர்களை "அக்னி குலம்" என்றே குறிப்பிடுகிறது. சேரர்கள் சங்ககால இலக்கியங்களில் தங்களை "மழவர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.  கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும் மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர். தமிழ்நாடு அரசு வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் "பள்ளிகள் க்ஷத்ரியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்" என்றும் தெரிவிக்கிறது.  சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார் அவர்கள் யதுவம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப் பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல "எந்தன் குலப்பெருஞ்சுடரே" என்றும் "நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே" என்றும் அவர் (குலசேகரர்) அருளிச்செய்த "நாலாயிர திவ்ய பிரபந்தம்" பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். சேர மன்னர் குலசேகர ஆழ்வார், யது குலம் (என்னும்) யாதவ குலத்தில் அவதரித்த கிருஷ்ண பகவானைக் "எங்கள் குலத்தில் பிறந்தவரே" என்று குறிப்பிடுகிறார்கள்.


கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் "யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை "வன்னி" என்றும் "பன்னாட்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். (Foreign Notices of South India, K.A. Nilakanta Sastri, University of Madras, Page - 150 & 153). சேரமான் பெருமாளுக்கு  முடிச்சூட்டுதல் விழாவில் அப் பகுதியில் வாழ்ந்த "வேளாண்மை செய்யும் வேளாளர் இன மக்கள்" கலந்து கொண்டதை பற்றி "வெள்ளாளர்களின் கொங்கு ஆவணம்" குறிப்பிடுகிறது. அதில் மன்னர் சேரமான் பெருமானை "அக்னி கோத்திரத்தான்" என்று குறிப்பிடுகிறது.  அது:-

 
"நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்
பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.


எனவே "சேரர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது முற்றிலும் உண்மையாகும்.  அத்தகைய சேரர்களின் கிளை மரபினர்களே  "யது குல மலையமான்கள்" ஆவர்.


சங்க இலக்கியங்கள் சேரரை "மலையர்" என்று குறிப்பிடுகிறது.  சேரர்களின் கிளை மரபினர்களான "மலையமான்கள்" தங்களை சேதிராயர்கள் என்றும் மிலாட்டுடையார் என்றும் கோவலராயர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள "திருக்கோயிலூரே" மலையமான்களின் தலைநகராகும். சங்ககாலத்தில் இவ்வூர் "திருக்கோவலூர்" என்று அழைக்கப்பெற்றது. மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் சோழர் காலத்துக் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள்.  திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள், "வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும் "வன்னியநாயன்  செதிராயனென்" என்றும் "பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்" என்றும் குறிப்பிடுகிறது. மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை "வன்னிய மலையமான்" என்றும் "வன்னிய தேவேந்திர மலையமான்" என்றும் "ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும் "கிள்ளியூர்  மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்" என்றும் குறிப்பிடுகிறது. 


குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான்.  இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய நாயன்" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள்.  சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட "மழவர் பெருமகன்" என்பதும்  சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்ட "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும்.   அதாவது "வன்னியத் தலைவன்" என்பதாகும்.  மழவர்கள் வன்னியர்கள் ஆவர்.  கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தருமபுரி கல்வெட்டு "வன்னியர்களை மழவர்" என்று குறிப்பிடுகிறது.  "மழவூர்" என்ற ஒரு நாடு அக் காலக்கட்டத்தில் தருமபுரியில் இருந்ததை அக் கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது.  பிற்கால அதியமான்கள் தங்களை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்று "கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்" குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.  அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.  அது :-


"திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப்
பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்
பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"


(பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்).        


மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் :


"ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள்
பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்
பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய
பெரும்பள்ளியாழ்வார்க்கு "


தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள்.  அது, "ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில்  (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள்.  எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர். 


இன்றைய "அரியலூர், பெரம்பலூர்" மாவட்டங்கள் சங்ககாலத்தில் "மழ நாடென்றே" வழங்கப்பெற்றது. மழ நாடான அரியலூரில் ஆட்சி புரிந்த "மழவராய அரசர்கள்" தங்களை "பள்ளி" என்றும் "வன்னிய குலம்" என்றும் குறிப்பிடுகிறார்கள்.  அதைப்போலவே "திருவக்கரை மழவராய அரசர்களும்" தங்களை "வன்னியர்"  என்றும்  "பள்ளி" என்றும் குறிப்பிடுகிறார்கள்.  மழவர்கள் என்பவர்கள் "சிலை வீரர்கள்" (வில் வீரர்கள்) என்று நச்சினார்கினியர் அவர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில்  "மழவர் குடியும்" ஒன்றாகும். அத்தகைய குடியோர் "வன்னியர்கள்" ஆவார்கள். இவ் மழவர் குடியில் வந்தவளே சோழர்களின் ராஜமாதாவாக விளங்கிய  "செம்பியன் மாதேவி"  ஆவாள்.   பிற்காலச் சோழர்கள் காலத்தில் "வன்னியர்கள்" மழநாட்டின் "வில் வீரர்களாக" சோழர் படையில் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் "பள்ளிகள்" என்ற பெயராலும் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள்.


செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது.  இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது.  இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.  மேலும் "மும்மலராயன்" என்பது "மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும். மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.  கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில் "மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது.


முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி.1016)  கீழூர் கல்வெட்டில்,  மலையமான்களை "பார்க்கவகோத்திரத்து பிராந்தகன் யாதவ பீமனான உத்தமசோழ மிலாடுடையார்" என்று தெரிவிக்கிறது.  திருக்கோயிலூர் கல்வெட்டு (கி.பி.1059) மலையமான்களை "பார்க்கவ வம்சத்து மிலாடு உடையார் இரணகேசரி இராமரான நரசிங்கவன்மர்" என்று தெரிவிக்கிறது.  மேற்குறிப்பிட்ட சோழர்கள் காலத்துக் கல்வெட்டின் மூலம் மலையமான்கள் தங்களை "யாதவ பீமன்" என்றும் "பார்க்கவ கோத்திரம்" என்றும் "பார்க்கவ வம்சம்" என்றும் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றனர்.     


கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் தங்களை மூவர் கோயில் சமஸ்கிரத கல்வெட்டில் "யது வம்சம்" என்றும் "யாதவர்" என்றும் குறிப்பிடுகின்றனர். அங்கு அவர்களின் கன்னட மொழி கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இவர்கள் "சோழர்களுக்கு" மிக நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் தங்களை "இருக்குவேள்" என்றும் "இளங்கோவேள்" என்றும் "இருங்கோளன்" என்றும் குறிப்பிடுகிறார்கள்.


சோழர்கள் காலத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், காட்டுமன்னார் கோயில், விளந்தை, உடையார்பாளையம் போன்ற பகுதிகள் "இருங்கோளப்பாடி" என்று கல்வெட்டில் அழைக்கப்பெற்றது. வெள்ளாற்றின் இருபுறங்களிலும் சோழர்கள் காலத்தில் வேளிர்களான "இருங்கோளர்கள்" ஆட்சிபுரிந்தார்கள். சங்ககாலத்தில் "இருங்கோவேள்" என்னும் வேளிர் மன்னன் "பிடவூரை" தனது தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார்கள். இவ் வேளிர் மன்னனான "இருங்கோவேளை" சோழ மன்னனான கரிகாலச் சோழன் வென்றிருக்கிறான். இவனது தலைநகரான "பிடவூர்" என்பது இன்றைய காட்டுமன்னார் கோயில் தாலுக்காவில் உள்ள "புடையூர்" ஆகும். இது வெள்ளாற்றின் தெற்கு கரையோரத்தில் உள்ளது. முற்காலச் சோழனான கோசெங்கண்ணான் விளந்தையில் ஆட்சிபுரிந்த வேளிரான "விளந்தை வேளை" போரில் வென்றிருக்கிறான். இன்றைய உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள விளந்தையானது, கி.பி.10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் இருங்கோளப்பாடி நாட்டு "விளந்தை கூற்றம்" என்று வழங்கப்பட்டது.


வெள்ளாற்றின் வடக்கு கரையோரத்தில் உள்ள எறும்பூரில் உள்ள முதலாம் பாராந்தகச் சோழன் (கி.பி.935) கல்வெட்டு "இருங்கோளன் குணவன் அபராஜிதன்" என்ற வேளிர் மன்னரை பற்றி குறிப்பிடுகிறது.


காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டு (கி.பி.959), "இருங்கோளர் கோனான நாராயணன் புகளைப்பவர் கண்டன்" என்று குறிப்பிடுகிறது. இவர் சுந்தர சோழனின் கல்வெட்டில் (கி.பி.962) "இருங்கோளர் கோனான புகழ்விப்பிரகண்டன் அவனி மல்லன்" என்று குறிப்பிடப்படுகிறார்கள்.


கி.பி. 986 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு வேளிர் அரசனான "இருங்கோளன் நாரணன் பிரித்திவிபதியார்" என்பவரை குறிப்பிடுகிறது. இவர் உத்தமச் சோழனின் மாமனார் ஆவார். இவரது (இருங்கோளர்) மகள் "வானவன் மாதேவியார்" உத்தமச் சோழனின் பட்டத்து அரசியாவர்கள்.


கி.பி. 992 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு "இருங்கோளன் பிரித்திவிபதி அமனி மல்லன்" என்ற வேளிர் குல மன்னனை பற்றி குறிப்பிடுகிறது. இம் மன்னன் முதலாம் ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலத்தில் இருந்திருக்கிறான். இந்த வேளிர் அமனி மல்லனின் பட்டத்தரசி, பொத்தப்பிச் சோழன் சத்தியரையர் மகளான "மலையவ்வை தேவியார்" ஆவார்.


அமனி மல்லனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் "இருங்கோளர் கோனான அமனி மல்லன் சுந்தர சோழன்" விருத்தாசலம் கல்வெட்டில் (கி.பி.1014) குறிப்பிடப்படுகிறான். இவ் வேளிர் மன்னனின் பட்டத்தரசி "கன்னரன் மாதேவடிகள்". இவ்வரசி மிலாட்டுடையார் மகளாவார்.


ராஜாதிராஜ சோழனின் (கி.பி.1050) விருத்தாசலம் கல்வெட்டு, "விசையைபுரக் கூற்றத்து விசையபுரத்துப் பள்ளி அமனி மல்லன்" என்ற வேளிர் அரசனை பற்றி குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு இவரை "வன்னியர்" என்று குறிப்பிடுகிறது.


திட்டக்குடி வட்டம் பெண்ணாடம், விக்கிரம சோழனின் கல்வெட்டு (கி.பி.1130), "பள்ளி கூத்தன் மதுராந்தகனான இருங்கோள ராமன்" என்ற வேளிர் அரசனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு இவரை "வன்னியர்" என்று குறிப்பிடுகிறது.


திட்டக்குடி வட்டம் வசிஷ்டாபுரம் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, வன்னியர் சமூகத்தை சேர்ந்த "தேனூர் துண்டராயன் திருச்சிற்றம்பலமுடையார்" என்ற குறுநில மன்னனை பற்றிக் குறிப்பிடுகிறது. இவர் "நாவலூர் இருங்கோளர்" மகளாகிய குலோத்துங்கச் சோழியார் என்பவளை திருமணம் செய்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழனின், கோயில்பாளையம் கல்வெட்டு, இவரை "துண்டராயன் திருவிராடன் குன்றன்" என்றும் இவருடைய அரசி பெயர் "குலோத்துங்கச் சோழியார்" என்றும் குறிப்பிடுகிறது.


"துண்டநாடு உடையார்கள்" என்ற வன்னிய குறுநில மன்னர்கள் சோழர்கள் காலத்தில் அரியலூர் பகுதியை ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்களை பற்றி இருபதுக்கும் மேற்பட்டக் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. இவர்கள் "வேளிர்கள்" ஆவார்கள். சோழ மன்னன் வீர ராஜேந்திரனின் (கி.பி.1067) கல்வெட்டில், துண்டநாடு உடையார்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அவர் "பள்ளி கூத்தன் பக்கனான ஜெயம்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்" என்பவராவார்கள்.


இந்த குறுநில மன்னனைப் போலவே, முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1099) ஆட்சிக் காலத்தில் "துண்டநாடு உடையார் சோழ குல சுந்தரன் கல்யாணபுரம் கொண்டார்" என்ற துண்டநாடு உடையார் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்கள். இவரை அக் கல்வெட்டு "தேனூர் உடையான்" என்று குறிப்பிடுகிறது. இவர் மகா பராக்கிரம சாலியாக இருந்திருப்பார் என்பது இவர் பெயரான "கல்யாணபுரம் கொண்டார்" என்பதில் இருந்து தெரியவருகிறது. கல்யாணபுரம் என்பது "சாளுக்கிய தேசமாகும்". இந்த துண்டநாடு உடையார் நிச்சயமாக "கலிங்கத்து போரில்" பங்கேற்றிருக்கிறார் என்பதும் அவர் சாளுக்கிய தேசத்தை வென்றதின் காரணமாக, முதலாம் குலோத்துங்கச் சோழன் அவருக்கு "கல்யாணபுரம் கொண்டார்" என்ற பட்டத்தினை வழங்கியிருப்பார்கள் என்பதும் கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. இத்தகைய "துண்டநாடு உடையார்கள்" கல்வெட்டுகளில் "வாணகோவரையர்" என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வாணகோவரையர்கள் "பள்ளி" என்றும் "வன்னியன்" என்றும் கல்வெட்டில் அழைக்கப்பெற்றனர். வாணகோவரையர் "க்ஷத்ரியர்கள்" ஆவார்கள். {The Nandi plates of Rastrakuta Govinda III (806 A.D) record the grant by Govinda III, at the request of "Kshatriya Mahabali Banaraja", named Sriparama, of the village of Kandamangala, to Isvaradasa, head of the Sthana (i.e. Matha) in the temple on the Nandi Hills}.

           
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் ஊர்த் தெருவில் நடப்பெற்றுள்ள, மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி. 1188) கல்வெட்டை, முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இக் கல்வெட்டு வன்னாடுடையார்களைப் பற்றி தெரிவிக்கிறது :-


"பிரிதிசூரச் சதுர்வேதிமங்கலமான பிரம்மதேசத்தை இராஜ ராஜ வன்னாடுடையார் அவர்கள், "வல்லுவன் புலியனான இருபத்துநால் பேரரையன்" உள்ளிட்ட பள்ளிகளுக்கு (வன்னியர்களுக்கு) காணியாக வழங்கியுள்ளார்கள் :-

"நாட்டரையனுக்கும்",

"புலியன் மாதனான மகதை நாட்டு பேரையனுக்கும்",

"புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானுக்கும்",

"புலியனான திக்கும் சாத்தன் பெரியானுக்கும்",

"சோமன் புலியனுக்கும்"



இவர்கள் (வன்னியர்கள்) வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு தவிர மற்றவர்களுக்கு  விற்பதில்லை என்று கல்வெட்டில் தெரிவித்து கையெப்பம் இட்டுள்ளனர். கையெப்பம் இட்டவர்கள் :-


"மகதை நாட்டு பேரையன் புலியன் பெரியானான வன்னாட்டு நாடாழ்வானும்" (வன்னியர்),

"கரிகால சோழனான சனநாத வன்னாடுடையானும்",

"இராச ராச வன்னாடுடையானும்". ஆவார்கள்.


இத்தகைய மாட்சிமை பொருந்திய "ராஜ குல சந்ததியர்களான"  வன்னியர்கள், தங்களை "இராசக்குலவர்"  (இராஜ குலத்தவர், க்ஷத்ரியர்) என்று சோழர்கள் காலத்து "கிழப்பழுவூர்" கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர்.  மேலும் இவர்கள் தங்களை "பார்கவ கோத்திரத்தை" சார்ந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.   வன்னியர் குல க்ஷத்ரியர் சமூகத்தை சேர்ந்த உடையார் பாளையம் அரசர்கள், தங்களை "கங்கநூஜா வம்சத்தை சேர்ந்த பார்கவ கோத்திரத்தார்கள் என்றும் நெருப்பு கடவுள் சந்ததியில் உதித்த வன்னிய குலத்தவர்கள்" என்று தங்களது வம்சாவழி பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்கள். (The "Udaiyar Palayam Chieftains" refer them as "Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the God of Fire).


இத்தகைய மகா பெருமை பொருந்திய "நெருப்பு கடவுள் சந்ததியர்களின்" ஆதி இருப்பிடம் "துவாரகை" என்னும் நகரமாகும்.  துவாரகையின் சிலப் பகுதிகள் இன்று கடலுக்குள் மறைந்து விட்டாலும், எஞ்சிய மிகப்பெரிய நிலப்பரப்புக்களே  இன்றைய  "சிந்து சமவெளி" பகுதியாகும். இத்தகைய "துவாரகையை" பற்றிய குறிப்புகள் நமக்கு சங்க இலக்கியங்களில் கிடைக்கிறது.  சங்க காலப் புலவர் கபிலர் பாடிய புறநானூற்றில் (பாடல் 201 & 202) துவாரகையை ஆண்ட வேளிர்கள் வடபால் முனிவன் ஒருவனின் "யாக குண்டத்தில்" பிறந்தவர்கள் என்றும் அவ் வேளிர்களின் 49 வது சந்ததியில் வந்தவன்  புலிக்கடிமால் என்னும் ஓர் அரசன் என்றும் அதில் குறிப்பிடுகிறார்.  தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் "விஸ்வபுராணசாரம்" என்னும் இலக்கியத்தையும் மற்றும் சம்புவராய மன்னர்களால் ஆதரிக்கப்பெற்ற இரட்டை புலவர்கள் பாடிய "ஏகாம்பரநாதர்  உலாவையும்" ஆராய்ந்து புறநானூற்றில் (பாடல் 201) குறிப்பிடப்படும் வடபால் தவமுனிவர்  என்பவர் "சம்பு மாமுனிவர்" என்று முடிவு கண்டுள்ளார்கள்.  விஸ்வபுராணசாரம், "சம்புமா முனிவன் வேள்வி தழல் தருமரபில் வந்தோன்" என்று குறிப்பிடுகிறது.


மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், புறநானூற்றில்  குறிக்கப்பெறும்  "புலிக்கடிமாலின்" வழிவந்தவர்கள் "ஹோய்சாளர்கள்" என்றும் திருவண்ணாமலையில் ஹோய்சாளர்கள் வழிவந்த மன்னன் "வீரவல்லாளன்" என்பவன் ஆண்டதை "அருணாச்சலப்புராணம்" என்னும் இலக்கியம் குறிப்பிடுவதாக தன்னுடைய "திரவிடத்தாய்" என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.  மேலும் அப்புத்தகத்தில் அவர் "யாக குண்டத்தில்" தோன்றியவர்கள் "வேளிர்கள்" என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.


 கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் "அருணாச்சலப்புராணம்", ஹொய்சால மூன்றாம் வீரவல்லாள தேவனை  "வன்னி குலத்தினில் வரு மன்னா"  என்றும்  "அனல் குலத்தோன்" என்றும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.  ஹோய்சளர்களின் லட்சனையான "கண்ட பேரண்டமும்" அம்மன்னனது சிலையும் திருவண்ணாமலை கோயிலில் உள்ளது.  மேலும் அக் கோயிலில் ஆண்டுதோறும் அம்மன்னனுக்கும் அவனது "க்ஷத்ரிய சந்ததியர்களுக்கும்" சிறப்புகள் செய்யப்படுகிறது.  இத்தகைய புகழ் மிகு ஹொய்சால மன்னர்கள் தங்களை "யது வம்சத்தவர்கள்" என்றும் "யாதவர்கள்" என்றும் குறிப்பிடுகிறார்கள்.  இத்தகைய "யது வம்சத்தில்" தோன்றிய க்ஷத்ரியர்களான ஹொய்சாளர்களின் உறவினர்கள் தான்  "ராஷ்டிரகூடர்களும்", "சாளுக்கியர்களும்", "காலசூரிகளும்'  ஆவார்கள்.


கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திவாகரம் நிகண்டு சாளுக்கியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது.  அவர்கள் "கேழல் (பன்றி) கொடியைச் சின்னமாகக் கொண்ட சளுக்கை வேந்தர் வேள்புலம் என்னும் பகுதியை ஆண்டனர்" என்று குறிப்பிடுகிறது.  கி.பி.578 ஆம் ஆண்டை சேர்ந்த பாதாமிக் கல்வெட்டு ஒன்றில் சாளுக்கியர்களின் தோற்றம் பற்றி குறிப்பிடுகிறது.  கார்த்திகேயன் (முருகன்) என்னும் கடவுளை வழிப்படுபவர்கள் என்றும் மாள்வ்ய கோத்திரத்தைச் சேர்ந்த ஹாரீதி என்பவரின் பிள்ளைகள் என்றும் பன்றிக் கொடியை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது.  கல்வெட்டுகள் அவர்களை "க்ஷத்ரியர்கள்" என்றும் "சந்திர குலத்தில்" தோன்றியவர்கள் என்றும் "யது வம்சத்தவர்கள்" என்றும் "யாதவர்கள்" என்றும் குறிப்பிடுகிறது.  சீன யாத்ரிகன் யுவான் சுவாங் மேலை சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை "க்ஷத்ரியன்" என்று குறிப்பிட்டுள்ளான். சாளுக்கியர்களின் வம்சத்தவரான முதலாம் குலோத்துங்கச் சோழன், குலோத்துங்கச் சோழன் உலாவில் "துவராபதி வேளிர்" (முகில் வண்ணன் பொன்துவரை இந்து மரபில்) என்றும் "அக்னி குலத்தவன்" (தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்) என்றும் அழைக்கப்பெற்றான்.              


 ஹொய்சால நாடான "மைசூரில்" இன்று இருக்கும் யதுகுல "மைசூர் உடையார்கள்"  ஹொய்சாளர்களின் சமூகத்தவர்களே ஆவார்கள்.  இவர்கள் தங்களை "யாதவர்கள்" என்று குறிப்பிடுகிறார்கள்.  இவர்களின் சின்னமும் "கண்ட பேரண்டமாகும்".  அது இன்று "கர்நாடக அரசின் சின்னமாகும்".  மைசூர் உடையார்கள் தங்களை "ஸ்ரீ கண்டிரவன்" என்றும் குறிப்பிடுகிறார்கள்.  இப் பெயர் வேளிர் அரசன் "கண்டீரக் கோப்பெருநள்ளியின்" பெயரை நமக்கு நினைவுப் படுத்துகிறது.     


விஜயநகர பேரரசர்களும் (சங்கம,சாளுவ)  "யது வம்சத்தவர்கள்" என்றும் "யாதவர்கள்" என்றும் "க்ஷத்ரியர்கள்" என்றும் "சந்திர வம்சத்தவர்கள்" என்றும் "தேவகியின் கணவர் வழி வந்தவர்கள்" என்றும் பல கல்வெட்டுகளிலும் செப்புபட்டையங்களிலும் குறிக்கப்பெற்றனர்.  விஜயநகர பேரரசர்கள் ஹொய்சாளர்களின் உறவினர்கள் ஆவர். திருவண்ணாமலை ஆவூர் கல்வெட்டில் (கி.பி.1379),  விஜயநகர அரசன் வீர கம்பண்ண உடையாரை மூன்றாம் ராஜ நாராயண சம்புவராயர்  "மைத்துனனார்" என்று குறிப்பிடுகிறார்கள்.  இக் கல்வெட்டின் மூலம் சம்புவராயர்களும் விஜயநகர அரசர்களும் உறவினர்கள் என்பது தெரியவருகிறது. கி.பி. 1463 ஆம் ஆண்டின் "உஞ்சினி செப்புபட்டயம்" விஜய நகர சாளுவ மன்னன் மல்லிகார்ஜுன தேவ மகாராயரை "சம்பு மாமுனிவன் யாகத்தில் தோன்றியவர்" என்று குறிப்பிடுகிறது. அது :-


"சம்புமா முனியார் யாகத்தில் அவதரித்தானவர்
அய்யன் சூரர் (திரு) புவனம் தெக்ஷனாதிபதிக்கு
விசையர் மகா வீரப்பிறதாபர் வன்னிய வேட கண்டர்
அக்கினிப் புரவி யுள்ளவர் மகா பிறாக்கிறம சாலியறானவர்"
(Avanam - 19, Jul-2008, Page-104), (Mallikarjuna Maharayar, 1463 A.D).


பாண்டிச்சேரி வில்லியனூர் செப்புபட்டயம், மல்லிகார்ஜுன தேவ மகாராயரை "ராஜ வன்னியன்" என்று குறிப்பிடுகிறது.   அது :-


"கண்டன்மார் தந்திரிமார் படையாக்ஷியார் என்னும் பல பட்டம் பெற்ற சோம சூர்ய அக்கினி வம்ச பன்னாடரான உறவின் முறையார் அனைவரும் போய் இராஜ வன்னிய இராஜஸ்ரீ மல்லிகார்ச்சுன தேவ மகா இராயரைக் கண்டு பேச அப்போது இராயரும் சிம்மாசனம் விட்டு இறங்கி நமது வம்சத்தாரென்று தெரிந்து தேவாலய பூஜையிருக்க மடத்து தருமம் நமக்கேனென்று இராயரும் கேட்க"  என்று தெரிவிக்கிறது .


அதாவது, இராஜ வன்னிய இராஜஸ்ரீ மல்லிகார்ஜுன தேவ மகாராயர் அவர்கள், பல நாட்டை உடையவர்களான வன்னியர்களை (பன்னாட்டவர்கள்) பார்த்து "க்ஷத்ரியர்களாகிய நமக்கு தேவாலயம் மற்றும் அதில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் இருக்கும்பொழுது நான்காம் வருணத்தார்களின் மடத்து தருமம் நமக்கு ஏன்" என்று கேட்டிருக்கிறார்கள்.  இதன் மூலம் வன்னியர்கள் "க்ஷத்ரியர்கள்" என்பது தெரியவருகிறது.      


இத்தகைய புகழ் மிகு "நெருப்பு கடவுள் சந்ததியில் உதித்த வன்னிய குலத்தவர்கள்" தங்களது பண்டைய தொடர்பை இன்றும் விடாமல் தமிழகத்திலும், இலங்கையிலும், கர்நாடகத்திலும் மற்றும் ஆந்திரத்திலும் "திரௌபதி வழிபாடு" மூலம் காத்துவருகிறார்கள். மேலும் பண்டைய கலையான "பாரத கூத்து கலையையும்", "அர்ஜுனன் தபசுவையும்", "அரவான் களப்பலியையும்" இன்றும் அவர்கள்  தொடர்வது வரலாற்றின் சிறப்பம்சமாகும். இத்தகைய நிகழ்வுகள் அவர்களின் பண்டையக் கலாச்சாரத்தை பறைச்சாற்றுவதாக உள்ளது. வாழ்க பண்டைய அரசக் குடிகள்.   


----- xx ----- xx ----- xx ----- xx -----