சோழர்கள் காலத்து பல கல்வெட்டுகள் சம்புவராய மன்னர்களை "பல்லவர்கள்" என்றே குறிப்பிடுகிறது. சம்புவராயர்களது அரச சின்னமும் கொடியும் பல்லவர்களின் சின்னமான "காளையே" ஆகும்.
சம்புவராய மன்னர்களால் ஆதரிக்கப்பெற்ற "இரட்டைப் புலவர்கள்" தங்களுடைய "ஏகாம்பரநாதர் உலாவில்" சம்புவராய மன்னரை "தத்துபரி பல்லவன் சம்பு குல பெருமாள்" என்று குறிப்பிடுகிறார்கள்.
பல்லவர்களான "காடவராய வன்னிய மன்னர்களும்" மற்றும் "சம்புவராய வன்னிய மன்னர்களும்" உறவினர்கள் என்பதை ஆறகளூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. காடவராய மன்னர்களும் சோழ மன்னர்களும் மிக நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். சம்புவராய மன்னர்கள் சோழ மன்னர்களைப் பற்றி காஞ்சிபுரம் கல்வெட்டில் குறிப்பிடும் பொழுது "எங்கள் வம்சம்" (க்ஷத்ரியர்) என்றே குறிப்பிடுகிறார்கள்.
பல்லவ மன்னர்களும் சோழ மன்னர்களும் தங்களை "பிரம்ம க்ஷத்ரியர்" என்றே குறிப்பிடுகிறார்கள். திருச்சி திருவெள்ளறை கல்வெட்டு, பல்லவ மன்னன் நந்தி வர்மனை "பிரம க்ஷத்ரிய குலோத்பவம்" என்று சொல்கிறது. அதாவது "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்று சொல்கிறது. அதே போல சோழ அரசியும் கங்க அரசன் "துர்வினிதனின் (550-600 A.D) ராணியை, "ப்ரம க்ஷத்ரிய" என்று சொல்கிறது. அது :-
"உரகபுராதிப ப்ரம க்ஷத்திரிய சோழ குல திலக ஸ்ரீ
தக்த சரணசந்தான பரசூதா" (Epigraphia Indica, Vol-XVIII, No.4).
மேற்குறிப்பிட்ட உறுதியான சான்றுகளின் மூலம் வன்னியர்கள் "க்ஷத்ரிய சமூகத்தவர்கள்" என்பதும் அவர்கள் "ஆண்ட பரம்பரை" என்பதும் உண்மையாகிறது.
----- xx ----- xx ----- xx -----